Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஏப்ரல் 29, 2020 12:17

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை ( PCR TEST ) நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஊரடங்கு காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திகளை சேகரிக்க களப்பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை ( PCR TEST) சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்படுகிறது. இதை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) ரமேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி ஆணையர் மகேஸ், மாநகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்